×

டாஸ்மாக் விற்பனையாளரிடம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது

சேத்தியாத்தோப்பு, பிப். 21:   சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம், லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.    
 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதில் அதே ஊரைச் சேர்ந்தவர் வீரமணி (40), விற்பனையாளராக உள்ளார். சேத்தியாத்தோப்பு அடுத்த சாங்காங்குடியை சேர்ந்த மோகன்(46) மேற்பார்வையாளராக உள்ளார். மோகன் விற்பனையாளர் வீரமணியிடம் வேறு கடைக்கு மாற்றாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வீரமணி, கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை போலீசார் வீரமணியிடம், ரசாயன பவுடர் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அவர் கடையில் இருந்த மோகனிடம் பணத்தை கொடுத்தபோது,
அங்கு மறைந்து இருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மெல்வின்ராஜா, இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் போலீசார் மோகனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Tags : supervisor ,salesman ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10...